Wednesday, May 8, 2024
Home » வாலாஜாபாத் அருகே பயங்கரம்; போதையில் தகராறு செய்ததால் அண்ணன் அடித்து கொலை: தம்பி கைது

வாலாஜாபாத் அருகே பயங்கரம்; போதையில் தகராறு செய்ததால் அண்ணன் அடித்து கொலை: தம்பி கைது

by

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (51). இவரது, மனைவி காந்தாமணி (45). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மேலும், சரவணனுடன் பிறந்தவர்கள் 3 தம்பிகள். இதில் 2 பேருக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரவணனின் கடைசி தம்பியான வடிவேல் (40). இவருக்கு திருமணமாகவில்லை. இதனால், வடிவேல் அவரது அம்மாவுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு, வந்து அம்மாவிடம் போதையில் தகராறு செய்வது வழக்கம். இதை தட்டி கேட்கும் தம்பி வடிவேலிடம், அண்ணன் சரவணன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த சரவணன், அம்மாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், தம்பி வடிவேல் அம்மாவிடம் ஏன் குடித்துவிட்டு வந்து, சண்டை போடுகிறாய் என்று கேட்டுள்ளார். இருவருக்கம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சரவணன், தட்டிகேட்ட வடிவேலை திட்டியுள்ளார். இதனால், அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து முடிந்துள்ளது. பின்னர், சண்டை நேற்று காலையிலும் நீடித்தது.இதில், தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து வந்ததில், ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த சரவணன், வடிவேலுவின் கை விரலை கடித்துள்ளார். இதில், காயமடைந்த வடிவேல், வலி தாங்க முடியாததால், ஆத்திரமடைந்து ஒரு கட்டையை எடுத்து சரவணனின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, வடிவேல் தலைமறைவாகினார். சரவணனின் மற்ற தம்பிகள் மற்றும் அம்மா, உறவினர்கள் அலறி துடித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியர் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சரவணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வடிவேலை வலைவீசி தேடி வந்தனர். கருக்குப்பேட்டையில் பேருந்து நிறுத்தம் அருகே சுற்றி திரிந்த வடிவேலை  நேற்று மாலை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

16 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi