விராலிமலை.ஏப்.4:விராலிமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார். விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி ராஜாம்மாள் (70) கூலித் தொழிலாளி. இவர் வேலை நிமித்தமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் இறந்தார்.இது குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.