பெரம்பலூர்,ஏப்.4: பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் டயர் வெடித்து டீசல் டேங்க் சேதமடைந்ததால் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், முத்துராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மருத முத்து மகன் சுரேஷ் என்கிற பெரியசாமி என்பவருக்கு சொந்தமான லாரியை, அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் அய்யனார் என்பவர் நேற்று மாலை அரியலூர் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். இந்த லாரி பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் கவுல்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் பின்புற டயர் வெடித்ததால், டீசல் டேங்க் உடைபட்டு தீப்பிடித் துள்ளது. இதனால் அரியலூர் தேசிய நெடுஞ் சாலையில் லாரியின் பின்புறம் குபுகுபுவென கரும்புகையுடன் 10 அடி உயரத்திற்கு தீ, கொழுந்துவிட்டு எரிந்ததால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில், தீயணைப்புத் துறை யினர் அங்கு விரைந்து சென்று, பற்றி எரிந்து கொண்டிருந்த லாரியின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இருந்தும் லாரியின் பின் புறம் பெரும் அளவு எரிந்து சேதமாகிப்போனது. சம்பவம் தொடர்பாக பெரம் பலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.