ஜெய்ப்பூர்: ‘காங்கிரசால் வாக்கு வங்கி அரசியல்தான் செய்ய முடியும். வளர்ச்சிக்கு எல்லாம் வாய்ப்பில்லை’ என்று அமித்ஷா விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் அவர் (ராகுல்) ஆற்றிய உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? இது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த தேசம். இந்தியா ஒரு தேசம் இல்லை என்று கூறியவர் இப்போது வெளிநாட்டின் ரூ.41,000க்கும் மேல் மதிப்புள்ள பர்பெர்ரி டி-ஷர்ட் அணிந்து இந்தியாவை ஒன்றிணைக்கும் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். ராகுல், பாரதத்தை இணைக்க தயாராக இருக்கிறார், ஆனால் அவர் முதலில் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும். வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது. திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே செயல்பட முடியும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் பாஜ ஆட்சி அமைத்த பிறகு காங்கிரஸுக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும்’’ என்றார்….