வத்திராயிருப்பு, ஏப்.10: வத்திராயிருப்பில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 283 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களது புகைப்படம், அவர்கள் நிற்கும் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் வாக்கு இயந்திரங்கள் எதிர்பாராத விதமாக பழுதாகி விட்டால் அதற்கு பதிலாக மாற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.