Saturday, April 27, 2024
Home » வாகன தகுதி சான்றிதழ் பெற ₹5,500 லஞ்சம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கர் கைது-₹2.5 லட்சம் சிக்கியது

வாகன தகுதி சான்றிதழ் பெற ₹5,500 லஞ்சம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கர் கைது-₹2.5 லட்சம் சிக்கியது

by Karthik Yash

கடலூர், ஜூன் 1: கடலூரில் வாகன தகுதி சான்றிதழ் பெற ரூ.5 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(35). நேற்று முன்தினம்(30ம் தேதி) கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் எனது நண்பர் செல்வராஜ் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்யலாம் என சென்னையில் இருந்து TN 05 BW 2007 என்ற வாகனத்தை வாங்கி வந்தார். வாகனத்துகு பெயர் மாற்றம் தகுதி சான்று உள்ளிட்ட பிற வேலைகளை செய்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2,050ஐ இணைய வழி மூலம் செலுத்தி ரசீதை பெற்றுள்ளார்.

பின்னர் கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்து சான்றிதழ் கோரினார். அப்போது கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரை, தகுதி சான்றிதழ் பணியை முடித்துக்கொடுக்க ரூ.5,500 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க செல்வராஜூக்கு விருப்பமில்லை. எனவே லஞ்சம் கேட்ட ஆர்டிஓ சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார்சுதாகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் நண்பர் செல்வராஜூக்கு பதிலாக லஞ்சமாக கேட்ட ரூ. 5500 பணத்துடன் வெங்கடாஜலபதி கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் கொடுத்தபோது, அலுவலகத்தில் மறைந்திருந்த ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகரையும், அவருக்கு உதவியாக லஞ்சப் பணத்தை பெற்று கொடுக்கும் புரோக்கர் சிவசங்கர் (எ) குள்ள சிவாவையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூ.2,50 லட்சதை கைப்பற்றினர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகருக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள வீடுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பணம் சிக்கிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

thirteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi