திருவொற்றியூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பறக்கும் படையினர் பல இடங்களில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி நித்தியானந்தம் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த நபரிடம் ரூ.82 ஆயிரம் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்….