காரிமங்கலம், மே 25: காரிமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட காரிமங்கலம், பெரியாம்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய பிர்காவில் உள்ள 32 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் ஜமாபந்தியில் 125 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று கம்பைநல்லூர் பிர்காவிற்குட்பட்ட 11 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தியில், தனித்துணை கலெக்டர் சாந்தி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நேற்று 91 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் சுகுமார், டிஎஸ்ஓ மகேஸ்வரன், சர்வேயர்கள் ஜாகிர் உசேன், குமரவேல், ஆர்ஐ சுரேஷ், விஏஓ.,க்கள் சிவக்குமார், செல்வம், சிலம்பரசன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய் தீர்வாயத்தில் 91 மனுக்கள் குவிந்தன
previous post