சென்னை: வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக சார்பில் முதல்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் முதல்கட்ட வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது. இந்நிலையில் தினகரனின் அமமுக முதல்கட்டமாக 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; அமமுகவில் அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுவோம். பல கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம், இறுதியானதும் நிச்சயம் தெரிவிப்போம். அமமுக தேர்தல் அறிக்கை வரும் 12-ம் தேதி வெளியிடப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டுமே அமமுக அறிவிக்கும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கம் திட்டம் அறிவிக்கப்படும். வெற்றி நடை போடுவதாக விளம்பம்- வெற்றி நடை எங்கே என கேள்வி எழுப்பினர். தமிழகம் வெற்றிநடை போடவில்லை, கடனில் தள்ளாடுகிறது. அமமுகவில் இருந்த சீனிவாசன்நெருக்கடி காரணமாக அதிமுகவில் இணைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். …