மதுரை, மே 9: கொட்டாம்பட்டி அருகேயுள்ள பூமங்கலப்பட்டியைச் சேர்ந்த செல்லம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் வரும் 26ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வடமாடு மஞ்சு விரட்டு நடத்த அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ஜல்லிகட்டு தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்ட அரசாணையில், மனுதாரர் கிராமம் இடம் பெறவில்லை. எனவே, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரும் இந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறியுள்ளனர்.