திருமங்கலம், மே 9: திருமங்கலம் பிகேஎன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 568 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர். திருமங்கலம் பிகேஎன் கலை அறிவியல் கல்லூரியின் 22 மற்றும் 23வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜ் விழாவை துவக்கிவைத்தார். முதல்வர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரைகாமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 568 மாணவ, மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வித்யாசால கமிட்டி மாஸ்கோசெல்வம், மாணவ, மாணவியர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், கல்லூரி பொருளாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாலையில் கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது.