Thursday, May 16, 2024
Home » லாடபுரத்தில் 9 கோழிகள் திருட்டு ஆட்டை அறுத்து திருட்டு

லாடபுரத்தில் 9 கோழிகள் திருட்டு ஆட்டை அறுத்து திருட்டு

by MuthuKumar

பெரம்பலூர், ஏப்.15: லாடபுரம் கிராமத்தில் வயலில் உள்ள பட்டியில் அடைக்கப் பட்டிருந்த 3 வான்கோழிகள் உள்பட 9 கோழிகள், 1 ஆடு திருட்டுப்போனது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் தாலுக்கா, லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் ரகு (40) என்பவருக்கு லாடபுரத்தில் இருந்து மேலப்புலியூர் செல்லும் சாலையில் வயல்காடு உள்ளது. ரகு நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு தன் வயல் காட்டில் வளர்த்து வரும் ஆடு கோழிகளை பட்டியில் அடைத்துவிட்டுவீடுதிரும்பினார்.

நேற்று அதிகாலை 6 மணிக்கு வயல்காட்டிற்குச் சென்று பார்த்தபோது வயலில் வளர்த்து வந்த ஆடு, கோழிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குறிப்பாக மர்ம நபர்கள் ஒரு ஆட்டினை அறுத்து துண்டாக்கி எடுத்துச் சென் றிருப்பதும், அந்த ஆட்டின் ரத்தம் வயல்காட்டில் பல இடங்களில் சிந்தி இருப் பதும் தெரியவந்துள்ளது. 3 வான்கோழிகள், 1கினி கோழி, 3கோழிகள்,2சேவல் கள் என 9 கோழிகள் திருடு போயிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர் பாக ரகு அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவுசெய்து ஆடு, கோழிகள் திருடு போனது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ் விசாரணை

பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான இந்திய தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள வாலிகண்ட புரம் வாலாம் பிகை சமேத வாலிஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி காலைமுதல் மாலைவரைகோயில் நடைதிறக்கப் பட்டு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

You may also like

Leave a Comment

eight + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi