அண்ணாநகர்: வடபழனி வெங்கடேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பிரசாத் பஞ்சாலி(37). அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் ஜூவல்லரி நடத்துகிறார். இவரிடம் அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்த ஜித்துராஜ்(24) 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி சிறிது சிறிதாக நகைகளை வாங்கி விற்று பணத்தை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், புத்தாண்டு அன்று தன் கடையில் வியாபாரம் நன்கு முறையில் நடைபெறுவதாக நகைகள் அதிகம் தேவைப்படுவதாகவும் கூறி 477 கிராம் தங்க நகைகளை பெற்று சென்றுள்ளார். அதன் பிறகு அதற்கான பணத்தைரூ.25 லட்சம் திருப்பி தராமல் காலதாமதம் செய்துள்ளார். இதையடுத்து அவரது கடைக்கு பிரசாத் சென்று பார்த்தபோது கடை முழுவதும் காலிசெய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் செல்போன் நம்பரை வைத்து அவரை தேடுகின்றனர்….
ரூ.25 லட்சம் நகையுடன் வாலிபர் தலைமறைவு
previous post