தெஹ்ரான் : ஈரான் நாட்டில் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி (64) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.