ராஜபாளையம், பிப். 9:ராஜபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி முகவர் கூட்டம் டி.பி. மில் ரோடு ஐஎன்டியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், நான்குனேரி தொகுதி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் பேசினார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன் சக்தி மோகன், சங்கர்கணேஷ், ஐஎன்டியூசி தொழிற்சங்க தலைவர் பிரபாகரன், ஹெச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் கண்ணன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வமணி, எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ராமர், இளைஞர் காங்கிரஸ் ராஜாராம், மாணவர் காங்கிரஸ் ஸ்ரீமான் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர தலைவர் சங்கர் கணேஷ் செய்திருந்தார்.