விருதுநகர், பிப். 8: விருதுநகரில் சாய்பாபா கோயில் அருகே சிவகாசி ரோட்டில் ஆமத்தூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில், 9 மூட்டைகள் இருந்தன. சந்தேகமடைந்த போலீசார் அவற்றை பிரித்துப் பார்த்த போது அவற்றில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(36), சரவணன்(23), விருதுநகர் முருகன் (30) என்பதும், அதிக லாபத்திற்கு விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காருடன் 3 பேரையும் போலீசார் கைது செய்து புகையிலை பொருட்கள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.