Monday, June 17, 2024
Home » யுஏஇல் மனிதநேயத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்.!

யுஏஇல் மனிதநேயத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்.!

by kannappan

டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகள் ஈடுபட்டவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனிதநேயத்திற்கானஇந்த விசாவை  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெரும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விசா வழங்குவதற்கான நிகழ்ச்சி அன்வர் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமீரக பிரமுகர் அலி செய்ய து புத்தாவில் அல் மத்துருசி, அன்வர் குழுமம் அப்துல் காதர், டாம் சர்வீஸ் ஷானவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

You may also like

Leave a Comment

11 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi