மொடக்குறிச்சி, மார்ச் 24: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அந்தந்த தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக நேற்று ஈரோட்டில் இருந்து மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 277 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.