கேடிசி நகர், செப்.4: மேலப்பாளையம், அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் நெல்லை தினம் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு டாக்டர் பிரேமசந்திரன் தலைமை வகித்தார். இதில் எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய நீர், நிலம், மனிதர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நெல்லையின் சிறப்புகள் பற்றி மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதில் முன்னாள் எம்பி., விஜிலா சத்யானந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.