கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் சின்னப்பொண்ணு (65) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. புகாரின்படி வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில் பீரோ கடைப்பாறையால் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3 சவரன் நகை கொள்ளை போனது தெரிந்தது. மேலும் அருகே உள்ள மூன்று வீடுகளில் அடுத்தடுத்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவமும் நடந்துள்ளது. இருப்பினும், வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத காரணத்தினால் மார்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கும்மிடிபூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….