கோவை, ஏப். 7: பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (65). இவர் கோவையில் வசிக்கும் தனது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் பஸ்சில் கோவை வந்தார். பின்னர் உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கவுண்டம்பாளையம் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகை பறித்து தப்பி சென்று விட்டார். நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மயிலாத்தாள் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
previous post