சங்கராபுரம், ஜூலை 29: திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சூசை மனைவி மேரி (58). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்தில் அவரது சொந்த கிராமமான இளையாங்கண்ணிக்கு செல்வதற்காக சென்று உள்ளார். மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து இளையாங்கண்ணி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த தங்கசெயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 23 பவுன் நகையும், ஒரு செல்போன், இரண்டு ஏ.டி.எம் கார்டு வீட்டின் சாவி, 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மர்மநபர் திருடி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பையில் பார்த்தபோது, நகை உள்ளிட்டவை மாயமானது ெதரியவந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அவர் மூங்கில் துறைப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.