கிருஷ்ணகிரி, பிப்.7: பர்கூர் அடுத்த நியூ விஐபி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(75). இவர் நேற்று முன்தினம், தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டூவீலரில் வந்த மர்மநபர், திடீரென கிருஷ்ணவேணி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், பர்கூர் எஸ்ஐ குட்டியப்பன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.