ஸ்பிக்நகர், ஏப். 17: முள்ளக்காடு காந்தி நகரை சேர்ந்தவர் முத்துவேல் செல்லப்பாண்டி மகன் உத்தர செல்வம் (36). இவர், இதே பகுதியில் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆந்திராவில் இருந்து உப்பு ஏற்றுவதற்காக வந்த லாரி இவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த உத்தரசெல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு அருகே விபத்தில் வாலிபர் பலி
previous post