தூத்துக்குடி, ஏப். 17: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் வழக்கில் கைதான தொண்டு நிறுவன இயக்குநரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் பாலகுமரேசன்(46). தொண்டு நிறுவன இயக்குநரான இவர், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமானோரிடம் ரூ.36.13 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பாலகுமரேசனை கைது செய்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் கலெக்டர் லட்சுமிபதிக்கு பரிந்துரை செய்தனர். அவரது உத்தரவின் பேரில் பாலகுமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பேரூரணி மாவட்ட சிறை அதிகாரியிடம் வழங்கினர்.
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி கைதான தொண்டு நிறுவன இயக்குநர் மீது குண்டாஸ்
previous post