நீடாமங்கலம், ஆக. 14: நீடாமங்கலம் அருகில் உள்ள முன்னாவல் கோட்டை பள்ளியில் குறுவட்ட கபடி போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகில் உள்ள முன்னாவல் கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் மன்னார்குடி அளவிலான குறு வட்ட கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் 22 பள்ளியிலிருந்து கலந்து கொண்டனர். போட்டியை முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், குறு வட்ட துணைச் செயலாளருமான ராஜேஷ்குமார், தலைமை ஆசிரியர் பொறுப்பு ரமேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர் களுக்கு நினைவு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க பொறுப்பாளர்கள், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாக படுத்தினர்.