டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். ஜவகர்லால் நேருவின் 58வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக கடந்த 1947ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ஜவகர்லால் நேரு, இறக்கும் வரை பிரதமராக பதவி வகித்தார். 1964 மே 27ம் தேதி அவர் மரணமடைந்தார். அவரது 58வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லி சாந்திவனில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவியார் சோனியாகாந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில், நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகியும், அவரது கருத்துக்கள், அரசியல் மற்றும் தேசத்திற்கான தொலைநோக்கு சிந்தனைகள் இப்போது நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். நேருவின் நினைவு தினத்தையொட்டி தனது ட்விட்டரில் இதனை கூறியுள்ள அவர், நேருவின் மதிப்புகள் எப்போதும் நாட்டை வழிநடத்தும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும், நேருவின் நினைவு தினத்தையொட்டி அவரை நினைவுகூர்ந்துள்ளார். …