கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் தமிழக, கேரளா, கர்நாடகா காவல்துறை, வனத்துறை மற்றும் கலால்துறை உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கோவை சரக டிஐஜி சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தர வடிவேல், ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன், ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர், கர்நாடக மாநிலம் காமராஜ் நகர் எஸ்பி பத்மினி சாகு, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட எஸ்பி சசீதரன், சாம்ராஜ் நகர் கலால் பிரிவு இணை இயக்குனர் நாகசாயனா, முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் வித்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.