Thursday, May 16, 2024
Home » முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்

முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்

by Ranjith

 

ஊட்டி, ஏப். 10: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத்துள்ள சிவப்பு கொன்றை மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் பல்வேறு வகையான மலர்கள் காணப்படும். பல வண்ணங்களை கொண்ட இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வனங்களிலும், வனங்களை ஒட்டியுள்ள சாலையோரங்களில் பல்வேறு வகையான மலர்கள் மரங்களில் பூத்துக்காணப்படும்.

இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, சேவல் கொண்டை மலர்கள், கொன்றை மலர்கள், நீல நிற ஜெகரண்டா மலர்கள், பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் அவ்வப்போது பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் ஏராளமான மயில் கொன்றை மரங்கள் உள்ளன.

ஆண்டு தோறும், கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த மரங்களில் சிறப்பு நிறுத்தில் மலர்கள் பூத்துக்காணப்படும். இந்த மலர்கள் சாலையோரங்களில் கொட்டி கிடக்கும். தற்போது இங்குள்ள மரங்களில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. சாலையோரங்களில் இரு புறங்களிலும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் முதுமலை வழியாக செல்லும் பொதுமக்களும் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர்.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi