கடையம், மார்ச் 12: ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளம் மடவார் விளாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக முதியவர் ஒருவர் யாசகம் பெற்று வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் அருகில் திடீரென மயங்கி கீழே விழுந்த அவர் இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திடீரென இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி அவர் இறந்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் திடீர் சாவு
previous post