புதுச்சேரி, பிப். 13: புதுச்சேரி சட்டசபையில் முதல்வரின் தனிச்செயலராக பணியாற்றி வருபவர் அமுதன், அமைச்சரவை அலுவலகத்தின் துறைத்தலைவர் பொறுப்பும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் தேவைகளை நிறைவேற்றித்தருவது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை தன்னிடம் வைத்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், முதல்வரின் தனிச்செயலரிடம் தனக்கு மாற்று கார் ஒன்றினை அவசர தேவைக்காக கேட்டுள்ளார். அப்போது, வெளியில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளுங்கள், அதற்கான எரிபொருளுக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். எரிபொருளுக்கு பணம் இல்லாமலா? நான் இருக்கிறேனா? மாற்று கார் இருந்தால், கொடுங்கள், இல்லாவிட்டால் இல்லையென்று சொல்ல வேண்டியதுதானே எனகேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.