நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகளுக்கு என்இசிசி வாரம் 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 420 காசாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் முட்டை விலையில் 50 காசுகள் உயர்த்தி என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் விலை நிர்ணயம் செய்துள்ளார். இதன்படி ஒரு முட்டையின் விலை 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….