நெல்லை: தமிழக உள்ளாட்சிகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என நெல்லையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு மாநகராட்சிகள், உள்ளாட்சிகளிலும் காலி இடங்களின் பட்டியல் தயாரித்து டிஎன்பிஎஸ்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சிகளிலும் நிரந்தர காலி பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். அடிப்படை பணியாளர்கள் பணியிடம் காலியாக இருந்தால் அவற்றை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மழை நீர் வடிகால் பணிகள் தூத்துக்குடியில் ரூ.84 கோடியில் நடந்து வருகிறது. சென்னையில் ரூ.983 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் உள்ளிட்ட பணிகள் காரணமாக தாமதமானாலும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். தமிழக முதல்வரை பொறுத்தவரை அனைத்துப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கித் தர தயாராக உள்ளார். நாங்கள் கோரிய நிதியை தந்து பணியை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். …
நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி உள்ளாட்சிகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்
previous post