ஸ்பிக்நகர், மார்ச் 14: தூத்துக்குடி தாளமுத்துநகர் துரைசாமி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (55). மீனவர். தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களுடன் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல்நகர் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர் திடீர் சாவு
previous post