கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை(45), சரண்ராஜ்(26), விவசாயிகள். உறவினர்களான இவர்களுக்கு இடையே சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சரண்ராஜ் விவசாய நிலத்தில் வேலைகளை முடித்துவிட்டு, அங்கேயே இரும்பு கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் அங்குள்ள கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார்.இந்நிலையில், நள்ளிரவில் ஏழுமலை அங்கு வந்துள்ளார். சரண்ராஜ் படுத்திருக்கும் இரும்பு கட்டிலில் மின்சாரத்தை பாய்ச்சி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து இரும்பு கொக்கி போட்டு, அதில் மின்வயரை இணைத்து இரும்பு கட்டிலுக்கு கொண்டு வந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சரண்ராஜ் அலறியடித்து ஏழுமலையை தடுக்க முயன்றுள்ளார். இதில், ஏழுமலை மீது மின்சாரம் தாக்கி துடிதுடித்தார். அலறல் சத்தம் கேட்டு பக்கத்து நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்த உறவினரான ரேணுகோபால்(33) ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் உயிரிழந்தனர்….
மின் கம்பத்தில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் பாய்ச்சி விவசாயியை கொல்ல முயன்ற வாலிபர் பலி: காப்பாற்ற சென்றவரும் சாவு
previous post