பல்லடம்,ஏப்.5:தாராபுரத்தில் இருந்து தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர்- தாராபுரம் சாலை தூத்தாரி பாளையத்திற்கு வந்தபோது அங்கு இருந்த மின்கம்பியில் உரசியதில் திடீரென தீப்பிடித்தது. இதனால் லாரியில் இருந்த தேங்காய் நார் முழுவதும் தீ பரவியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தேங்காய் நார்களை இறக்கியதால் லாரி சேதமின்றி தப்பியது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.