திருப்போரூர்: விழுப்புரம் மாவட்டம், மீ.மருதூர் மேடு கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மகன் குருசுபராஜபதி (20). சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை குருசுபராஜபதி, கல்லூரி முடிந்ததும் தனது பைக்கில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரை, அழைத்து கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை இறக்கிவிட்டு, அங்ருந்து அவர் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டார். மேலக்கோட்டையூர் அருகே சென்றபோது, திடீரென தறிக்கெட்டு ஓடிய பைக், எதிரே வந்த மினி லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், அதே வேன் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….