மாமல்லபுரம்: மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள், மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. இதனை, டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் விளையாட்டு பிரிவு சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் கைப்பந்து, கால்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். நீச்சல் பயிற்றுனர் ஆனந்த், தடகள பயிற்றுனர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஷ்வரன் கலந்து கொண்டு, கடற்கரை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளில் உள்ள அனைவருக்கும் தலா ரூ.500, ரூ.350, ரூ.200 வழங்கப்பட்டது. …
செங்கை, காஞ்சி மாவட்ட அளவில் விறுவிறுப்பான கடற்கரை விளையாட்டு போட்டிகள்: டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
previous post