ஊத்தங்கரை, ஏப்.22: ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பு பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, சிங்காரப்பேட்டை சபாபதி, மாவட்ட செயற்குழு கோவிந்தசாமி, அஞ்சலாமேரி, இளவரசன், எத்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.