Friday, May 17, 2024
Home » மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 பயிற்சி வகுப்பு 19ல் துவக்கம்

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 பயிற்சி வகுப்பு 19ல் துவக்கம்

by Ranjith

 

பெரம்பலூர், ஜூலை 13: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-2 பயிற்சிவகுப்புகள் தொடங்கப்படவுள் ளது என்று மாவட்டகலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்ட வே லைவாய்ப்பு மற்றும் தொ ழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப் புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது டிஎன்பிஎஸ்சி -2023 -2023-ம் ஆண்டு திட்ட நிரலில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group -I) மற்றும் (Group -II) குரூப்-2 தேர்வுக் கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயி ற்சி வகுப்புகள் 19 ம் தேதி முதல் பெரம்ப லூர் மாவட்ட வேலைவாய் ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நட த்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெறும்.

தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளருக்கான இலவச மாதிரி தேர்வுகள் தினமும் நடத்தப்பட்டு வரு கிறது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட் டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவுசெய்து கொள்ளுமாறும், அலைபேசி வாயி லாக தொடர்பு கொள்பவர் கள் 9499055913 என்ற எண் ணில் தொடர்புகொள்ளுமாறும், அதிக அளவில் மாணவர்கள் பங்குபெற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

7 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi