விருதுநகர், மார்ச் 7: உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரங்களை வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அதனை வழங்காமல், காலதாமதப்படுத்துவதோடு பாஜ அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் அர்ஜூனன் பேசினார்.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.