Saturday, May 18, 2024
Home » மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

by Neethimaan

சேலம் மார்ச் 17: சேலம் அம்மாப்பேட்டையில் மாயமான அரசுப்பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். சேலம் அம்மாப்பேட்டை அடுத்த நஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி. இவரது மகன் ரிதனேஸ்வரன் (11). இவர் அம்மாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த ரிதனேஸ்வரன், நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால் அதன்பின்னர் வீட்டிற்கு வரவில்லை. அன்றிரவு வெகுநேரமாகியும் மாணவன் வராததால், தாய் கலையரசி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் ரிதனேஸ்வரனை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் கலையரசி புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ரிதனேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில், அம்மாப்பேட்டை வடக்கு கிருஷ்ணன்புதூர் சுண்ணாம்பு சூளை பகுதியில் உள்ள ஊர் பொதுக்கிணற்றில் சிறுவன் ஒருவனது சடலம் மிதந்தது. இதனையடுத்து அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அது மாயமான ரிதனேஸ்வரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், வந்து சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாட சென்ற ரிதனேஸ்வரன் கிணற்றில் விழுந்து பலியானது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

12 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi