தில்லைநகர்: திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி வருவாய் அலுவலர் துரை, மாமன்ற உறுப்பினர்கள் கமால் முஸ்தபா, சுரேஷ்குமார், விஜயாஜெயராஜ், பைஸ் அகமது, நாகலட்சுமி நம்பி, விஜயலட்சுமி, பங்கஜம் மதிவாணன், சோபியா விமலா ராணி மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், ரவிக்குமார், பிரசாந்த், சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், பாலமுருகன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.