ஈரோடு, ஏப்.2: ஈரோடு திருநகர் காலணி அருகே கிருஷ்ணம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (39). இவர், ஈரோடு மாநகராட்சியின் 3ம் மண்டல அலுவலகத்தில் டிரைவாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேனகா (36). இவரும், 3ம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரனுக்கு முதுகு தண்டுவட பிரச்னை காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீதரன், அவரது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரையும் வெளியேற்றினார். தொடர்ந்து ஸ்ரீதரன் வீட்டில் பேனில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஸ்ரீதரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ஸ்ரீதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.