Monday, May 20, 2024
Home » மாநகராட்சி ஊழியர் தற்கொலை

மாநகராட்சி ஊழியர் தற்கொலை

by Karthik Yash

கோவை, மே 13: கோவை உக்கடம் புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் கோவை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டில் வைத்து மது குடித்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் மதுவுடன் விஷத்தை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக செந்தில்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

8 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi