Thursday, May 16, 2024
Home » மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பலாத்காரம் மேலும் 3 மாணவிகளுக்கு நேரடி தொடர்பு: கைதான 4 பேர் பகீர் வாக்குமூலம்; வீடு புகுந்தும் சீரழித்துள்ளனர்

மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பலாத்காரம் மேலும் 3 மாணவிகளுக்கு நேரடி தொடர்பு: கைதான 4 பேர் பகீர் வாக்குமூலம்; வீடு புகுந்தும் சீரழித்துள்ளனர்

by kannappan

சென்னை: பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த சக மாணவி மற்றும் 2 கல்லூரி மாணவிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள 3 கல்லூரி மாணவிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டனர். இதனால், மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் மாணவி பள்ளிக்கு போகவில்லையாம். இதுகுறித்து அவரது வகுப்பு ஆசிரியை மாணவியின் பாட்டியிடம் விசாரித்துள்ளார். அதற்கு அந்த பாட்டி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது பேத்தி சோர்வுடன் இருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு சென்றபோது அவரது ஆசிரியை, அவரை தனியாக அழைத்து விசாரித்துள்ளார். அப்போது மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஆசிரியையிடம் கூறி அழுதுள்ளார். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, பாட்டியிடம் விவரத்தை தெரிவித்தார். அதை தொடர்ந்து ஆசிரியை மற்றும் மாணவி, பாட்டி ஆகியோர் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகனை சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் படி உதவி கமிஷனர் பாலமுருகன் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஹூக்கா என்ற போதை பொருள் கொடுத்து தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் மேல ரதவீதியை சேர்ந்த வசந்த் கிரிஷ்(20) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரது நண்பர்களான சிவகாசி அலமத்துபெத்தி ரோடு சுப்பிரமணிய கோயில் தெருவை சேர்ந்த சினிமா துணை நடிகர் பால சிவாஜி(எ) ரஞ்சித்(25), சென்னை கொளப்பாக்கம் கதிரவன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் விஷால்(20), நங்கநல்லூர் 6வது மெயின் ரோடு நித்யா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகிய 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட பல் மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷ், துணை நடிகர் ரஞ்சித், கல்லூரி மாணவன் விஷால், கல்லூரி பேராசிரியர் பிரசன்னா ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:‘‘பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் வசந்த் கிரிஷின் நண்பரான, கல்லூரி மாணவர் விஷால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி படிக்கும் பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவியை காதலித்து வருகிறார். இதனால் தினமும் விஷால் தனது காதலியை பார்க்க பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு வருவது வழக்கம். அப்போது மருத்துவ கல்லூரி மாணவன் வசந்த் கிரிஷூம் உடன் வருவான். அப்போது அதே கடைக்கு பள்ளி மாணவியும் வருவார். அந்த பள்ளி மாணவியை பார்த்த வசந்த் கிரிஷ், அவருடன் நெருக்கமாக இருக்க உதவுமாறு விஷாலிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர், எனது காதலியிடம் மூலம் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன் என்று உறுதி கூறியுள்ளார். பின்னர் திட்டமிட்டப்படி விஷாலின் காதலி, பள்ளி மாணவியை பானிபூரி சாப்பிட அழைத்து வந்துள்ளார். அதன்படி வசந்த் கிரிஷ் ஒன்றுமே தெரியாதபடி பள்ளி மாணவியுடன் நெருக்கம் ஏற்படுத்தி, அதன் மூலம் செல்போன் நம்பர் வாங்கியுள்ளார். அதேசமயம், வசந்த் கிரிஷ் மற்றும் விஷாலுக்கு கஞ்சா மற்றும் ஹூக்கா என்ற போதை பொருள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதேநேரம் விஷாலுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் திருவொற்றியூரை சேர்ந்த கல்லூரி மாணவி, அவரது தோழியான மற்றொரு கல்லூரி மாணவி ஆகியோருடன் வசந்த் கிரிஷூக்கு ஹூக்கா என்ற போதை பொருள் பயன்படுத்தும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் வார இறுதி நாட்களில் வசந்த் கிரிஷ் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எப்போதும் போதையில் தான் இருப்பார்களாம். அப்போது ஆண் நண்பர்களுடன் கல்லூரி மாணவிகள் நடனமாடியும், உல்லாசமாக இருந்தும் வந்துள்ளனர். வார இறுதி நாள் பார்ட்டிக்கு துணை நடிகர் ரஞ்சித், பேராசிரியர் பிரசன்னாவும் வந்து கலந்து கொள்வது வழக்கம். அதன்படி ஒரு நாள் விஷால் காதலி மூலம் பள்ளி மாணவியை வசந்த் கிரிஷ் குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு தனது தோழிகளான 2 கல்லூரி மாணவிகளை வசந்த் கிரிஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு மாணவிக்கு ஹூக்கா போதை பொருளை தோழிகள் மூலம் கொடுத்து அவரை வசந்த் கிரிஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு போதை பழக்கத்திற்கு அடிமையான பள்ளி மாணவி தனது பள்ளியில் படிக்கும் சக மாணவியுடன் அடிக்கடி காதலன் வசந்த் கிரிஷ் குடியிருப்புக்கு வந்து ஹூக்கா போதை பொருள் உட்கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது நண்பர்களான கல்லூரி மாணவன் விஷால், துணை நடிகர் ரஞ்சித், பேராசிரியர் பிரசன்னா ஆகியோரும் பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வகையில் கடந்த 1 மாதமாக பள்ளி மாணவியை தனது தோழிகள் உதவியுடன் சீரழித்து வந்துள்ளனர்.பள்ளி மாணவி சீரழிக்கப்பட்டதற்கு கல்லூரி மாணவன் விஷாலின் காதலி மற்றும் அவரது தோழிகளான கல்லூரி மாணவிகள் உடந்தை என்று விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மாணவியுடன் ஆண் நண்பர்கள் ஒன்றாக இருப்பதை 3 மாணவிகளும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை வசந்த் கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி மாணவியிடம் காட்டி மிரட்டி இரவு 10 மணிக்கு மேல்  பாட்டி தூங்கிய பிறகு போன் செய்து வீட்டில் உள்ள மாணவியை காரில் அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பிறகு அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு மீண்டும் கார் மூலம் மாணவியை அவரது வீட்டில் இறக்கி விட்டு வந்துள்ளனர். சில நேரங்களில் மாணவியை அவரது பாட்டி வீட்டில் இல்லாத போது வசந்த கிரிஷ் மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபோல் ஒவ்வொரு வாரத்திலும் 3 அல்லது 4 நாட்கள் இரவில் மாணவியை தனியாக அழைத்து வந்து உடல் ரீதியாக பலவினப்படுத்தியுள்ளனர். மாணவி பாதிப்புக்குள்ளானதற்கு உடன் படித்த மாணவி மற்றும் 2 கல்லூரி மாணவிகள் தான் உடந்தை என்று கைது செய்யப்பட்ட 4 பேர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்”. அதைதொடர்ந்து பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் வழக்கில், குற்றம் செய்தவர்களை விட குற்றம் செய்ய தூண்டியவர்கள் தான் குற்றவாளிகள். எனவே, பெற்றோர் இல்லாமல் தனியாக பாட்டியுடன் வசித்து வந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த மற்றும் ஆபாச வீடியோ எடுத்த 3 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்ய வடபழனி அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆண் நண்பர்களை போலீசார் கைது செய்ததும் பள்ளி மாணவி உட்பட 2 கல்லூரி மாணவிகள் தங்களது செல்போன்களை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட  4 பேர் அளித்த தகவலின் படி போலீசார் 3 மாணவிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி மாணவிக்கு 15 வயது மற்றும் 2 கல்லூரி மாணவிகளுக்கு 19 வயது என்பதால் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று கவனமாக இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர். பாலியல் வழக்கு என்பதால் ஓரிரு நாளில் 3 பேரையும் கைது செய்து ரகசிய விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி கூட்டு பலாத்காரத்திற்கு 3 மாணவிகள் உடந்தையாக இருந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் ஆண் நண்பர்கள் ஒன்றாக இருப்பதை 3 மாணவிகளும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

eight + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi