சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 34-பி.யில் அறநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளில் வாடகைதாரர்களாக உள்ள நபர்கள் வாடகை செலுத்த தவறினாலோ அல்லது வாடகை நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ வாடகை உரிமையை ரத்து செய்து சொத்தினை சுவாதீனம் பெற அறநிறுவனத்தின் செயல் அலுவலர், அறங்காவலர் அல்லது அறங்காவலர் குழு தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்த தவறியவரின் வாடகை உரிமையை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணம் கேட்டு, சம்பந்தப்பட்ட அறநிறுவனத்தின் செயல் அறங்காவலர் அல்லது அறங்காவலர் குழுத்தலைவர் அனுப்பவேண்டும். விளக்கத்தினை சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். நிபந்தனைகளை மீறி செயல்படும் வாடகைதாரரின் வாடகை உரிமையை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நியாய வாடகை நிர்ணயத்தை எதிர்த்து அல்லது மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால் அதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை வாடகை உரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்தும்பட்சத்தில். அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட வாடகைதாரர் அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….