Saturday, June 1, 2024
Home » மாடித் தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்

மாடித் தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்

by kannappan

நமது முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் அன்றாட தேவையான நஞ்சில்லா காய்கறிகளை தங்களின் வீடுகளில் உற்பத்தி செய்வதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகவும் அமைத்திடும் வகையில், மாடித்தோட்ட தழைகள் மானிய விலையில்  வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகர்பகுதியில் தோட்டம் அமைக்க 6 வகை காய்கறி விதைகள், 6 எண்கள் செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தென்னை நார்க்கழிவு கட்டிகள், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, உயிர் கட்டுப்பாடு காரணிகள் டிரைகோடெர் மாவிரிடி, இயற்கைப் பூச்சிக் கொல்லியான வேப்பெண்ணெய் மருந்து வழங்கப்படும். மேலும், காய்கறி சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு, அடங்கிய 50 சதவீத மானியத்தில் ரூ.450 வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள 50 சதவீதம் தொகை பயனாளிகளின் பங்குத் தொகை ரூ.450 வசூலிக்கப்பட வேண்டும். ஒரு பயனாளி அதிகபட்சமாக இரண்டு தொகுப்புகள் வரை பெற முடியும். பயனாளிகள் http:tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.தொகுப்பு – சதீஷ்

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi