சென்னை: எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (32). திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் உள்ள ஆப்டிகல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, பைக்கில் எண்ணூர் விரைவு சாலை வழியே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மஸ்தான் கோயில் தெரு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே அறுந்து விழுந்த காற்றாடியின் மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது. இதனால் நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்….