சென்னை: கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி குழும தாளாளர் பி.புருஷோத்தமன் தலைமையில் பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:மழலையர் வகுப்பு மாணவர்களின் கல்வி இன்னும் தடைபட்டு நிற்கிறது. அவர்களின் கல்விக்கு வலுவான அடித்தளம் இளைய வயதில்தான் அமைக்கப்பட வேண்டும். எனவே இதை கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்….